tamilnadu

img

மக்களின் பசியைப் போக்க தயாரில்லை.... தேர்தலில் மட்டுமே பாஜக ஆர்வம் காட்டுகிறது!

லக்னோ:
மக்களின் பசியைப் போக்க நடவடிக்கை எடுக்காமல் தேர்தலில் மட்டுமே மத்திய பாஜக அரசு கவனம் செலுத்துவதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
பிற மாநிலங்களில் இருந்து உத்தரப்பிரதேசத்துக்குத் திரும்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தற் கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் சில நாள்களாக உத்தரப்பிரதேசத்தில் நடந்தன. அவற்றையும் வேலையின்மையையும் சுட்டிக்காட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் அகிலேஷ் கருத்து பதிந்துள்ளார்.

அதில், “கொரோனாவின் தாக் கத்தை மறந்துவிட்டு தேர்தல்களில் மட்டுமே பாஜக கவனம் செலுத்தி வருகிறது” என்று கூறியிருப்பதுடன், “வேலை வாய்ப்பின்மையையும் மக்களின் பசியையும் ஒரு பிரச்சனையாகவே பாஜககருதாதபோது, எப்படி அவற்றைத் தீர்க்கப் போகிறது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.தற்கொலைச் சம்பவங்களின் மூலமாக உத்தரப் பிரதேசத்தில் வேலையின்மை ஒரு பெரும் பிரச்சனையாக எழுந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், “பீகார் தேர்தல் விரைவில் வர உள்ளதால், சில நாட்களில் ‘நட் சத்திர பேச்சாளர்கள்’ மீண்டும் பறக்கத் தொடங்கி விடுவார்கள்” என்று உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மற்றும் மோடி, அமித்ஷா உள்ளிட்டோரையும் மறைமுகமாக அகிலேஷ் சாடியுள்ளார்.

;